சிப்பிக்குள் சிந்தா மழை

சிப்பிக்குள் சிந்தா மழை

112 pages2018கரங்கள் பதிப்பகம்
100

SHARE

About the Book

சிப்பிக்குள் சிந்தா மழை
எடுத்த உடன் கவிதைக்குள் நுழையாமல் என்னுரை பக்கத்தையும் எட்டிப் பார்க்கும் வாசக தோழமைகளுக்கு வணக்கம்.
கவிதையும் காதலும் விளக்கிச் சொல்ல வேண்டிய விளங்கிக் கொள்ள வேண்டிய விசயம் என்றாலும் இந்தத் தொகுப்பின் தலைப்பை விளக்க வேண்டிய தலையாயக் கடமை ஒரு எழுத்தாளனாய் எனக்கிருப்பதை உணர்கிறேன்.
அதென்ன சிப்பிக்குள் சிந்தா மழை.? சிப்பிக்குள் சிந்தாத எந்த ஒரு மழைத் துளியும் முத்தாக முடியாது.அது புத்தகமாக்கப்படாத இதுவரையில் இந்தக் கவிதைக்கான போலத்தான் எழுத்தும்.ஆமாம், கவிதைகள் யாவும் முழு அங்கீகாரத்தை பெறவில்லை.இப்போது இந்த புத்தகமெனும் காகித சிப்பிக்குள் கால் வைத்த பின்தான் தனக்குள்ளே அவை கவிதை என்றும் எனக்குள்ளே நான் கவிஞன் என்றும் கர்வப்பட்டு கொள்ள முடிகிறது.இனி சிப்பிக்குள் சிந்தா மழை என்று தலைப்பிட்ட தடித்த அட்டை தேவை இல்லை.கிழிப்பதானால் கிழித்து விடுங்கள்.
தலைப்பை விளக்கி விட்டேன்.தலைப்பின் கீழ் அடங்கி வரும் தொகுப்பை? விளக்குகிறேன். நீங்கள் இனி வாசிக்கப் போகிற ஒவ்வொரு கவிதையிலும் என்னை பாதித்த, என்னை ரசிக்க வைத்த நிகழ்வுகளும் விசயங்களும் நிரம்பி இருக்கின்றன. எழுதுதல் என்பதொரு கலை. அந்த கலையின் நோக்கம் என்ன? அதன் வெற்றி என்ன? கலையின் நோக்கமும் வெற்றியும் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் அல்லது கலைக்கே உரித்தான இன்பத்தை தர வேண்டும். இந்த இரண்டையுமே இந்த கவிதைத் தொகுப்பு செய்யுமென்று நான் நம்புகிறேன். இதிலுள்ள ஒருவரியேனும் உங்கள் வாழ்க்கையின் ஏதாவதொரு இடத்தில் உதவும். இது எனது இரண்டாவது தொகுப்பு.அன்புடையவளுக்கும் கவிதைத் அன்புக் குரியவளுக்கும் என்ற என் முதல் கவிதை தொகுப்பில் சொல்லிய வரிகளையே இப்போதும் சொல்ல ஆசைப் படுகிறேன்.
நமக்கு வாய்க்கிற வாழ்க்கைத் துணையைப் போல்
நாம் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் வல்லமை உடையது.
ஆக நாம் எப்படிப்பட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.நாம் வாசிக்கும் புத்தகம்"உன்னை நான் புரட்ட என்னை நீ புரட்ட நம்மாலொரு புரட்சி நடக்கட்டும்" என்று சொல்லுமளவிற்கு இருக்க வேண்டும். மேலும் வாய் நோக வாசித்தால் மட்டும் போதாது.வள்ளுவன் வாக்குப் படி "கற்க கற்றபின் நிற்க அதற்கு தக". நாம் வாசித்த புத்தகத்தின் வரியையாவது கடைபிடிக்க வேண்டும்.அது தான் நாம் வாசித்ததற்கும் வாழ்வதற்குமான அர்த்தம். ஒரு
இந்த புத்தகத்தை வெளியிடும் கரங்கள் பதிப்பகத்தாருக்கும் வெளியிட இந்த புத்தகத்தை கரமாய் இருந்து உதவிய பிரியமானவர்களுக்கும் இருகரம் கூப்பி பிரியமுடன் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ர.அஜித்குமார்.

You May Also Like