Back
Poem
December 17, 2022
பொம்பளனா எவ்வளவு எளக்காரம்?
SHARE

காத்தல இருந்து
பொழுதோட வரிக்கும்
ஊரங் காட்டுல
போதாத கூலிக்கு
நாயா நரியா
வேல செஞ்சுபுட்டு
இடுப்பு நோவட வந்தாலும்
பொம்பள நாந்தான்
சோறாக்கனுமாம்.
சேரினு சொல்லி
வெறவு அடுப்புல - புவயில
ஊதி ஊழ சிந்தி
வடிச்சு போட்டாலும்
தின்னு புட்டு
மூக்கி மூளி
ங்கொப்ப வூட்டுல இருந்து
என்னாடி கொண்டு வந்த
ங்கொப்பன ஓலி னு அடிக்குற புருசன
அனுசரிச்சு வாழுனுமாம்?
ஏன்னு கேட்டா
ஒன்னுகொன்னு வுட்டு குடுத்து
ஒத்துமியா வாழ்ந்தா தா குடும்பமாம்.
அம்மாந்திமுரெடுத்து
ஆம்மள ஆடும்போது
பொம்பளய மட்டுலும்
பொறுத்து போவச் சொல்லுற
ஒங்க நாயத்துலயும் குடும்பத்துலயும்
எஞ் சாண்ட கரச்சு ஊத்து ங்க போங்க.
எனுக்கு
ஒலச்சு சம்பாரிக்க
தெம்பு தெராணி இக்குது
நா ஒண்டியாவே இருந்துக்கறேன்.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...