Poem
September 25, 2018
நேரக்கொடுமை
SHARE

எத்தனை மணிக்கு தூங்கினாலும்
காலையில் எழுவதற்கு எட்டே முக்கால் ஆகி விடும்.
அவசர அவசரமாய் எழுந்து
உடுப்பை எல்லாம் கழட்டி விட்டு
இடுப்பில் ஒரு துண்டோடும்
கையில் பக்கத்து ரூம்மெட்டின் பக்கெட்டோடும்
கடைக்கோடியில் இருக்கிற பாத் ரூமிற்கு
குளிக்க போவேன்.
போகிற வழியில்
ஓபனாய் கிடக்கிற ஏதாவதொரு ரூமில்
பேஸ்ட், ஷாம்பு
இப்படி எனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து கொள்வேன் .
எடுக்கிற போது உரிமையாளர்கள்
திட்டுவார்கள். ஆனால் தடுக்க மாட்டார்கள்.
இவ்வாறு
எடுப்பதை எல்லாம் எடுத்து கொண்டு போய்
கழிப்பதை எல்லாம் கழித்து விட்டு
குளித்து வரும் போது
கொடியில் காய்கிற சர்ஷ்ட்களில் எதாவது பிடித்திருந்தால்
தூக்கி கொண்டு வந்து விடுவது வழக்கம்.
இப்படி என்ன தான்
அரசரல் புரசலாக ரெடி யானாலும்
கால் மணி நேர தாமதத்தோடு தான்
காலேஜ்க்கு போவேன்...
ஏன் லேட் என பெரும்பாலும்
யாரும் காரணம் கேட்க மாட்டார்கள்.
க்ளாஸ் எடுப்பது
மிஸ்டர் பெர்பெக்ட் வாத்தியாராக இருந்தால்
வெளியிலேயே நில்லென சொல்லி விரட்டி விடுவார்..
பரிவுடைய புரபசராக இருந்தால்
அட்டெண்ட்டன்ஸ் ஆப்சென்ட் தான்
உள்ள வா என
உட்கார வைத்து ப்ளேடு போட ஆரம்பித்து விடுவார்.
பரிவோடு கரிசனமும் உள்ள புரபசராக இருந்தால்
அரை மணி நேரம் கழித்து போனாலும்
அலௌ பண்ணி அட்டெண்ட்டன்ஸ் போட்டு விடுவார்..
என் நேரக் கொடுமை
நான் லேட்டாக போகிற போதெல்லாம்
பெரும்பாலும் முதலிரண்டு வகையானவர்கள் தான் இருப்பார்கள்.
ர. அஜித்குமார்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...