Back

Poem

December 22, 2022

நான் அமுதுண்டு செத்தவனா?

SHARE

நான் அமுதுண்டு செத்தவனா?


மாயக் கடலாய் மனதுள் ஓயாமல் ஆர்ப்பரிக்கிறது ஞாபகங்கள்.
நினைவின் புழுக்கள் மேயும் சடலாமாய் கிடக்கிறேன் நான்.
பார்க்கும் விழிகள் சிறிதென்று சொல்வதால்
நட்சத்திரங்கள் சிறிதாகி விடுவதில்லை. தோற்ற மயக்கே
ஆலம் விழுதையும் பாம்பாக்கி விடுகிறது.
அன்பைப் போல
நஞ்சுமிழ் சர்ப்பமும் கூட
கனிவாய் தான் உள் வரும்.
எல்லாம் அறிந்ததெனினும்
புரிபட வில்லை மனப் புலனுக்கு.
கனிவின் மொழி கேட்பின்
முன் நடந்த துரோகத்தின் கொலைகள் மறந்து
விஷத்தையும் அமுதென்று நம்பி குடிக்கிறது
மனதின் உதடு.
என்றாலும்
ஒரு கேள்வி மட்டும்
தொண்டைக்குள் சிக்கிய நெடும் மயிராய் அறுத்தெடுக்கிறது.
நாளை நான் செத்தால்
விஷமுண்டு செத்ததாய் சொல்வர்களா? இல்லை?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...