Back

Philosophy

January 21, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

#ஒரு_ராணுவ_வீரனின் கடைசி_நிமிடங்கள்
¤சாவதில்
சந்தோசப்படுகிறேன்

¤என் தாயை தாக்க
நினைத்த
அந்நிய சக்தி எதிர்த்து
ஆயுதம் பிடித்து
மாண்டு போவதில்
மகிழ்ச்சியடைகிறேன்;

¤வீழ்வது நானென்றாலும்
எழுவது என் நாடல்லவா
அதற்காக நான் ஆனந்தப்படுகிறேன்;

¤யாருக்கும் கிடைக்காதா
வரம்
நேசித்தவருக்காய்
உயிர்பிரிவது;
அந்த
அரிய வரம்
எனக்கு கிடைத்தை
எண்ணி மனம் பூரிக்கிறேன்;

¤இருந்தாலும்
இதயத்தில்
ஒரு விசும்பல்
கதறல்
காது கனக்கும்
ஒரு கனமான
அழுகுரல்
அது யாருக்காயும் அல்ல
என் மீது அன்பித்தவளுக்காக
நான் விருந்தாளி போல் தான்
வீடு போவேன் என்றாலும்
எனக்கு பிடிக்கும்
எல்லாம் சளிப்பே
இல்லாமல் சமைத்து வைத்து
நான் அன்பாக பேசும்
ஐந்தாறு வார்த்தைகளுக்காய்
ஏங்கி தவிக்கும்
என் மனைவி
என் மரணச்செய்தி கேட்டால்
எப்படி மனம் துடிப்பாள்
நினைக்கும் போதே
நிற்கப்போகும்
என் குண்டடிப்பட்ட
கல் நெஞ்சு
கதறுகிறது

¤என்னைப் போல்
அல்ல அவள்
உலகில் யாரும்
அறியாத
மெல்லுடலி
தயவுசெய்து
தவறியும் சொல்லி விடாதீர்கள்
அவளுக்கு
என் மரணச் செய்தியை
தாங்கமாட்டாள்.
நான் வருவேன்
என்ற நம்பிக்கையிலேனும்
அவள் வாழட்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...