Back
Philosophy
December 13, 2022
தத்துவம்
SHARE

சற்று முன் வெட்டுப்பட்ட காயத்தில் இருந்து பெருகும் ரத்தமாய் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு யாரையும் நினைத்துக் கொள்ள நேரமில்லை. அன்புக்கு கையேந்தி
இறைஞ்சும் போதும் கூட இரையாக்கிக் கொள்ள துரத்தும் காலத்திடம் இருந்து தப்பிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது என்பதே இவர்களின் எல்லா நேர பதிலாக இருக்கிறது. எப்போதும்
வெறுமையின் ஆசிட் மழையில் நனைந்து கொண்டிருக்கும் மனத் தரையில் கண்ணீரே நான் பொழிந்து கொள்ளும் எனக்கான கருணை மழை. அழாதே என்று சொல்லும் நீங்கள் ஏன் அழுகிறாய் என்று
கேளுங்களேன். உள்ளுக்குள்ளேயே தேக்கி தேக்கி கண்ணீரின் சூட்டில் உலையாகி கொதிக்கும் துயரத்தை ஒரே ஓலத்தில் வெளியேற்ற வேண்டும். ,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...