Back

Philosophy

September 20, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

சாதியை, சனாதன-ஓல்களை - அழிக்க கலப்பு மணமே வழி! கலப்பு மணங்கள் நிகழ வேண்டுமெனில் சாதி, மதம், பால் கடந்த - அறிவு சிந்தனை அல்லது உணர்வு வேண்டும். அத்தகைய உணர்வு யாதெனில்
அதுவே காதல். ஆனால் காதலை நிலைநாட்டிக் கொள்ள - எதையும் அல்லது யாரையும் சாரா நிலையில் இருக்க வேண்டும். அத்தகை நிலையை எட்ட சிந்தனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்
தற்சார்பெய்த வேண்டும். அதாவது mentally, economically - independentஆக இருக்க வேண்டும். இல்லையேல் அம்மா அப்பா அல்லது சமூக விசுவாச உணர்வினால் அல்லது நன்றியுணர்வினால்
அல்லது பாச உணர்வினால் அவர்களை வருத்தக் கூடாது என சாதியைப் பின்ன பற்ற வேண்டிவரும். அப்படியாகத் தான் இங்கு "எனக்கு சாதி மதத்துல நம்பிக்கை இல்ல. ஆனா எங்க வீட்ல
ஒத்துக்க மாட்டாங்க" என்று நிறையபேர் ஓல் விட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, சிந்தனை ரீதிரியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமடையாத ஒரு சமூதாயத்தில் காதல் மணங்கள்
சாத்தியமில்லை. காதல் மணங்கள் சாத்தியமில்லை எனில் கலப்பு மணங்களும் சாத்தியமில்லை. கலப்பு மணங்கள் சாத்தியப்படாத வரை சாதி ஒழிப்பும் சனாதன-ஓலழிப்பும் சாத்தியமில்லை.எனவே,
என் அன்புக்குரிய தோழ தோழி மார்களே கற்றுத் தெளிந்து சிந்தனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விடுதலையடையுங்கள். கூடவே, இந்த சமூகத்தில் இருக்கிற சாதி, மத, இன, பால், நிற,
பண அரசியலையும் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்வதோடு மட்டும் நில்லாமல் அதை எல்லாம் கடந்த அன்போடிருங்கள். அதை எல்லாம் கடந்த காதலில் விழுங்கள். விழுந்து தவழ்ந்து
மகிழ்ந்து எல்லாம் கடந்த காதலில் நிறைந்து கரைந்து இறந்து போங்கள். காதலே கதி மோட்சம். 💙❤️🖤

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...