Back
Philosophy
October 13, 2021
தத்துவம்
SHARE

பிரியங் கேட்டு
வட்டமிடும் என்னை
ஒரு ஈயினும் கேவலமாய்
விரட்டியப்பது
எந்த வகையில் நியாயம்?
அத்தனை இழிவாய்
ஆகி விட்டேனா நான்.
கைநிறைய சத்தியங்களோடும்
வாய் நிறைய முத்தங்களோடும்
காதலித்த நாட்களை
எப்படி உன்னால்
தூசி போல்
துடைத்தெறிய முடிந்தது?
உன் கர்த்தர்
அன்பைத் தானே போதித்தார்.
நீ ஏன்
இப்படி சிலுவைகளையும்
முள் கிரீடங்களையும்
தயாரிக்கிறாய்
கண்மணி?
நான் புரிந்த குற்றம் எதுவென்று
எனக்கு புரியவில்லை.
எதுவானாலும் சரி
என்னையே மெழுகாக்கி
என் கண்ணீரை சுடாராக்கி
உன் முன் மண்டியிட்டு
மன்னிப்போடு காதலையும் கோரு கிறேன்.
இந்த மெழுகு உருகியணையும் முன்
தயை கூர்ந்து
மனமிறங்கு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...