Philosophy
May 5, 2021
தத்துவம்
SHARE

அவளை எனக்கு ஏனோ மிகவும் மிக மிகவும் பிடித்து விட்டது. இது நாள் வரையில் இப்படி ஒரு நிலையை மனம் அடைந்ததே இல்லை. உமி போல உடலை உதறித் தள்ளி விட்டு மனதை மட்டுமே தருகிறாள்
அன்பினை சமைக்க. காலம் காலமாய் மலர் என்றும் மானென்றும் ஏதோ மசுரு மட்டைகளை உவமையாகச் சொல்லி உடலை முன்னிறுத்தி எழுதிய கவிதை இலக்கியம் கலாச்சார பண்பாட்டு விதிகளை எல்லாம்
பொய்யாக்கி தவிடு பொடியாக்கி புறந் தள்ளி விட்டு நான் அதுவெல்லாம் இல்லை பெண் என்றும் என் உடலென்பது சுதையில் வெந்தழியும் வெற்றுச் சதை என்றும் நிற்கும் அவள் முன் ஆண்டாண்டு
காலமாய் நிமிர்ந்து நின்ற ஆண் திமிரெல்லாம் எரிந்தழிந்து கொண்டிருக்கிறது. ம், தன் நிர்வாணத்தை தீ பந்தமாக்கி பழமைகளை கொளுத்தி எரியூட்டி நடக்கும் அவள் தன்னோடு
துணைக்கழைக்கிறாள் என் எழுத்தையும். இப்போது நானும் அவளும் கருத்தொத்து மனதொத்து புதுமை செய்ய புறப்பட்டு கொண்டிருக்கிறோம். மட்டுமன்றி எங்களுள் காதல் என்பதும் காமம்
என்பதும் எண்ணங்களும் செயல்களும் கூடி முயங்குதலே அன்றி புலன்களால் புணர்வது இல்லை. - பைத்தியக்காரன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...