Back

Philosophy

January 5, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

!..........மரம்........!!!
மனிதர்களே
எங்களுக்கு இல் வாழ்க்கை
இல்லை யென்றால்
உங்களுக்கு இல்லை வாழ்க்கை.........!!!!

ஒடித்தாலும் வெட்டினாலும்
நிழல் தந்து அரவணைக்கும்
நிழற்கூடங்கள் நாங்கள்...!!!

எல்லாரும் போற்றும்
பொய்யில் புலவன்
வள்ளுவன் வாக்கு
பொய்த்து போனது
ஆம்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல" என்று
அறியாமல் சொல்லிவிட்டான்.
அவன்
திருக்குறளை கொஞ்சம்
திருத்தி எழுதி இருக்கலாம்
இப்படி
"வெட்டினாலும் காக்கும் மரம்போல் மனம்நோகத் திட்டுவார் காத்தல் தலை" என்று.

இது மட்டுமல்ல
மனிதர்கள் எங்களை
சிற்றினம் பேரினம் என
வகைவகையாய்
வகைப்படுத்தி வைத்திருந்தாலும்
சாதி மதம் பார்க்கும்
மனிதர்களைப் போல் நாங்கள்
சல்லித்தனமாக
சண்டையிடுக் கொள்வதில்லை..........!!!!!!!!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...