Back
Philosophy
November 9, 2015
தத்துவம்
SHARE

மரணத்தின்
மடி தழுவ வேண்டுமென்று
மன்றாடுகிறது மனது
ஏனென்று காரணம் மட்டும்
என்னிடம் கேட்காதீர்கள்
காயம் பட்ட வார்த்தைகள்
கண்ணில் நீர் வழியச் செய்கின்றன
என் எதிர்பார்ப்புகளில்
நான் கண்ட ஏமாற்றங்களும்
என்னிடம் எதிர்பார்த்தவர்களுக்கு
நான் தந்த ஏமாற்றங்களும்
ஊசியாய் உயிர் வலிக்கச் செய்கின்றன
இறைவா
வலி தாங்கி
நான் வாழ்வது கடினம்
ஆகவே ஆண்டவனே
அடிபணிந்து வேண்டுகிறேன்
ஒளி வேகத்தில்
ஓடிப் போகட்டும் என் உயிர்..!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...