Back

Philosophy

September 3, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டார்களா? அவர்கள் போனால் போகட்டும் நண்பா. விட்டு விடு. நீயேன் வருந்திச் சாவுகிறாய். உன் அன்பு வேண்டியதாய் இருந்தவரையில் வாங்கிக் கொண்டார்கள். போதும் என்று தோன்றியதோ
என்னவோ புறப்பட்டு விட்டார்கள். போதும் என்று தோன்றுமளவு அவர்களை நேசித்ததற்காக நீ சந்தோசப்பட வேண்டுமே ஒழிய, "என்னை ஏமாற்றி விட்டார்கள்" என்று அவர்கள் மீது பழி சுமத்தி உன்னையும்
வருத்தக் கூடாது. அன்பு செய்பவர்களை யாரும் ஏமாற்றுவதும் இல்லை - யாராலும் ஏறாமற்றப் படுவதும் இல்லை . மாறாக விலகிப் போகிற/போனவர்களே ஏமாறுகிறார்கள். பெறுவதற்கரிய உன்னன்பை இழக்கிறார்கள். ஆக வருந்த
வேண்டியது அவர்கள் தானே அன்றி நீ இல்லை. போனவர்கள் போகட்டும் நண்பா. விட்டு விடு. இந்த வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை. எதையும் யாரையும் விடாப்பிடியாக பற்றிக் கொள்ள நினைப்பதை விட்டு விட்டு,
இனிமேலும், அன்புக்கான தேவையோடு வருகிறவர்களையும் அப்படியே அகம் நிறைய நேசித்து வழியனுப்பு.

  • பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...