Philosophy
August 8, 2020
தத்துவம்
SHARE

ஒரு தலைவன் என்பவன் மக்களுக்கு உதவாத எந்த இசங்களையும் பற்றிக் கொண்டிருக்க மாட்டான். மக்களின் மூளையை மழுங்கச் செய்யும் எந்த விசயங்களையும் முன்னெடுக்க மாட்டான். மக்களுக்கு ஒவ்வாத எதையும் திணிக்க
மாட்டான்.
ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது?
பள்ளிக் கூடங்களும் கல்லூரிகளும் மூடிக் கிடக்கும் போது கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொழித் திணிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு என்ன புரிகிறது.? ஒரு நல்லத் தலைவனிடத்தில் நாடு இல்லை. ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் நிலையில் நாட்டு மக்களும் இல்லை. ஆமாம் இது தான் உண்மை.
மேலும், கல்வியையும் பகுத்தறிதலையும் விட்டுவிட்டு இல்லாத கடவுளையும், இல்லாத /ஒன்றுக்கும் உதவாத சாதியையும், மதங்களையும் பற்றிக் கொண்டிருக்கும் நாள் வரையில் மாற்றம் மயிரில் கூட நடக்காது. இந்த
இத்துபோன சமாச்சாரங்களை விட்டுவிட்டு கல்வியையும் அன்பையும் அறிவையும் ஏந்துகிற போது தான் எல்லாம் மாறும்.
மேலும்,
இல்லை என்பதை ஏற்க முடியாதபடி கடவுளை நம்பிக் கொண்டிருக்கிற எல்லோரும் கடவுளைத் தேடி ஓடி நாடுகிறார்களே ஒழிய எது கடவுள் இல்லை என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. எது எல்லாம், எதில் எல்லாம் - கடவுள்
இல்லை என்று புரிந்து கொண்டாலே போதும் இங்கு பாதி பிரச்சனை தீர்த்து விடும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...