Back

Philosophy

July 10, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

குளிக்காத தோற்றம்
குடித்தவன் போல் முகம்
தாடி மழிக்காத கன்னம்
குத்தூசி போல உடல்
குத்துமென் இளமையை
குழைய செய்யும் பார்வை
தாழடைத்த பெண்மையை
சாவியிட்டு திறக்கும் அப்பாவி தனக் குறும்பு
பித்தனென்று பெயர்
புத்தி தெளிவு ற்ற
சித்தன் போல பேச்சு
மொத்தத்தில்
கவர்ச்சியில்லாத ஆள் நீ
உன்னில் கண்டு மயங்க ஒன்றுமில்லை
இருந்தும் என்ன விந்தையோ
இழந்தேனென் இதயத்தை
சொல் விந்து கொண்டென்னில்
காதல் கரு விதைத்தாய்
நீ பார்க்கும் போதெல்லாம்
நாணம் வந்தென்னை
வில்லின் நாணாய் வளைக்கிறது
நீ இல்லாத இந்த கணத்தில்
துயர்பட்டு மனம் நீரற்ற மீனாய் துடிக்கிறது
ஞானப் பித்தனே
பெண்மையின் பக்தனே
வா.. வந்து
கல்லாய் சமைந்த அகலிகை என்னை
உன் கரங் கொண்டணைத்து பெண்ணாய் செய்.

#என்னை_பற்றியது_தான்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...