Back
Philosophy
December 25, 2015
தத்துவம்
SHARE

ஏ ஆண் வர்க்கமே
அறிவாயா?
எங்களின் அவல நிலை.
பயம்
பள்ளிக்கூடம் போகும்
பச்சிளங் குழந்தைகளின்
மனதிலும் பயம்...!
காரணம்
உன் காமப் பசி...!!
பல் முளைக்காத குழந்தைகளும்
பலாத்காரம்...!!!!!
ஏன்
எல்லாம் உன் சதைப்பசி.!
உனக்கு சதை தானே வேண்டும்
சுடுகாடு போ
அங்கே புதைக்கப்படும்
சடலங்களோடு சல்லாபித்து கொள்...!
நாங்கள்
நத்தைகள்..!!
சின்ன தீண்டல்களும்
பயந்தவர்கள்..!
பெண் விடுதலை
பெண் விடுதலை என்று
பெரிதாய் குரல் விடுத்தாய்..??
இப்படி
பறக்கவிட்டு
சிறகறுக்கவா???
வேண்டாம்
வேண்டாம்
விடுதலையே
வேண்டாம்
விட்டு விடு
நாங்கள்
வீட்டுக்குள்ளே
சிறைபட்டு கிடந்தாலும்
சிறகோடு(கற்பு) வாழ்கிறோம்..!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...