Back

Philosophy

April 22, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

சகி,
எதுவோ போல் இருக்கிறது. ஒரு பெருங்களிறின் பிடியில் உடைந்து நொறுங்கி உதிரும் மூங்கில் மரமாய் உன் இல்லாமையின் வெறுமையில் நொறுங்கி கொண்டிருக்கிறேன். நிறைய காணொளிகளில் நீ பார்த்திருக்க கூடும்.
ஆற்றில் நீர் குடிக்க வரும் காட்டு விலங்குகளின் கால் கவ்வும் முதலையை.அப்படி தான் சகி, நீயற்ற வெறுமை என்னை பிடித்தாட்கொண்டு வதைக்கிறது. இங்கெல்லாமும் பொய்யாகவே தெரிகிறது. கானல் நீர் போல. யார்
அன்பு செய்தாலும் அல்லது அன்பென்று நெருங்கி வந்தாலும் அதில் ஏதோ போலித் தனம் இருப்பதாகவே தோன்றுகிறது. மழைக்கால இடி மின்னலுக்கு பயந்தோடி அம்மாவின் சேலைக்குள் ஒளியும் குழந்தையை போல இந்த
வெறுமையின், இந்த தனிமையின், இந்த போலித்தனங்களின் பிடியிலிருந்து தப்பி வந்து உன்னில் சரணடைந்து கொள்ள பார்க்கிறேன். ஆனால் நீ ஒளி ஆண்டு தொலைவிலெரியுமொரு விண்மீணாய் அல்லவா இருக்கிறாய்.சகி, நான்
சாகின்ற தருணத்திலாவது வந்துன் அன்பை சிறிது நிகழ்த்து. அது போதும். என் ஆத்ம சாந்திக்கு.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...