Back

Philosophy

April 20, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

என்
தெய்வீகத் தொழுகைக்கும்
அன்புக்கும் உரியவள்
நீ இல்லை.
அன்புக்கும் காதலுக்கும் காமத்துக்குமான
வேறுபாடே தெரியாத
உனக்குள் தெய்வீகம் எப்படி இருக்கும்?
வெறும் சந்தேகம் மட்டுமே
உன் அன்பாய் இருக்கிறது.
இனி உனக்கும் எனக்கும்
இடையில் ஒன்றும் இல்லை.
உன்னை நான் அன்பு செய்யச் சொல்லி கேட்டதுமில்லை.
இனி கேட்கப் போவதுமில்லை.
என் அன்புக்குரிய பாத்திரமும் நீ இல்லை.

போ....
என் பார்வையின் தொடுதலுக்கும் தேடுதலுக்கும் அப்பால்..
அப்பால் அப்பால்...
நீ எப்பால் வேண்டுமானலும் போ..
மொத்தத்தில்
என்னளவில் இல்லாமல் போய் விடு.

😣😣😣

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...