Back

Philosophy

March 22, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

நான் காலத்தை துரத்துகிறேனா?
இல்லை
காலம் என்னை துரத்துகிறதா?
எதை யார் துரத்தினால் என்ன.
மனம்
என்னையும் காலத்தையும்
மிஞ்சி விட்டல்லவா
ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு இடத்திற்கு போவதற்காக
பேருந்தில் ஏறி அமர்வதற்குள்
நான் போய் சேர வேண்டிய இடத்திற்கு
அது போய் விட்டு திரும்பியே விடுகிறது.
இப்போது
என் பேனா
இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கிற
இந்த நேரத்தில்
மனம் இதை எழுதி முடித்து
முற்றுப்புள்ளிக்கு அருகில் உட்கார்ந்து
ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது.
வாசித்தபடி
"அதற்குள்ளாகவா" என்று
ஆச்சர்ய படும் நீங்கள்
"இத்தனை வேகமாக
எழுதி முடிப்பது அசாத்தியம்.
இவன் அளந்து விடுகிறான்."
என்று நினைத்தபடி
சந்தேகத்தோடு
"இவ்வளவு
வேகமாக எழுதி முடித்து விட்டாயா..
சரி கடைசி வரி என்ன" வென்று
கேட்கும் கேள்வி
என் காதுக்குள் விழுகிறது.
இதோ
இது தான் கடைசி வரி.
"இப்படி பித்துத் தனமாக புலம்புவதா கவிதை?"

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...