Back

Philosophy

March 22, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

குளிக்கும் போது
உச்சந் தலையில் இருந்து இறங்கி
உள்ளங் கால் நனைத்து
தரை விழுந்துடைந்து சப்தமிடும் தண்ணீரின்
ஒழுங்கில்லாத தளாகதியை
ரசித்ததுண்டா நீங்கள்.?

தழுவி நழுவி
நனைந்து நனைத்து
புணர்ந்து சுகம் கொணரந்து
மயிரடர்ந்த இடங்களில் எல்லாம்
பனி போல இருந்து இறங்கியோடும்
நீர்த்திவலைகளை
கொஞ்சம் கண் பார்த்ததுண்டா நீங்கள்.?

காது மடல் முத்தமிட்டு
தொப்புள் குழியில் தங்கித் தவழ்ந்து
யாரும் தீண்டாத பாகம் தீண்டி
ஆனந்த மயக்கம் தரும் நீரின்
ஆரோகணமும் அவரோகணமும் கலந்த
அதன் ஒழுங்கில்லாத இசையை
செத்து விடுவதற்குள்
ஒரு முறையேனும் செவி சாய்த்து கேளுங்கள்.

முடிந்தால் கொஞ்சம் நேரமொதுக்கி
நீரோடு சல்லாபம் செய்யுங்கள்.
நீரோடு சந்தோசம் செய்யுங்கள்.
நீரோடு சங்கீதம் செய்யுங்கள்.

அவசரகதியாகவே ஓடி
அவசரகதியாகவே செத்து விடாதீர்கள்.
வாழ்க்கை பயணம் நீர் குமிழி போன்றது.
எந்த நேரத்தில்
எங்கு உடைந்து, முடிந்து போகும் என்று யாருக்கும் தெரியாது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...