Back
Philosophy
March 5, 2019
தத்துவம்
SHARE

யாரோ அழைத்தார்கள்.
என்னென்னவோ பேசினார்கள்.
"எங்கே இருக்கிறாய்" என்று கேட்டார்கள்?
"அப்பாலுக்கும் அப்பால்" என்றேன்
"எப்பாலுக்கும் அப்பால்" என்றார்கள்.
"முப்பாலுக்கும் அப்பால்" என்றேன்
"முப்பாலுக்கும் அப்பால் எப்பால் இருக்கிறது" என வியப்புற கேட்டார்கள்.
"முப்பாலுக்கும் அப்பால் எப்பால் என்று தெரியாமல் தான் அப்பாலுக்கும் அப்பால்" என்று சொன்னதாகச் சொன்னேன்.
எதிர்தரப்பில் இருந்தவர்க்கு என்னப் புரிந்தோ தெரியவில்லை..
" அப்பாலுக்கும் அப்பாலே இருங்கள்" என்று அழைப்பை அவசரமாக துண்டித்து விட்டார்.
என்னை பயித்தியமென்று நினைத்து பயந்து விட்டார் போல.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...