Back

Philosophy

February 5, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

யாதொரு தீதுமறியா
பேதை உன்னை
பாதகம் பல செய்தோன் நான்
நிராகரிப்பது பிழையன்றோ.?
குற்றம் செய்யா உன்னை
குற்றமே உருவானவன்
தண்டித்தல் தான் தகுமோ?
குவளை மலர் விழியும்
குழந்தை எழில் மொழியும்
பவளச் செவ்வாயும்
மாட்டுத் திமில் மார்பும்
ஆட்டுக் கல் இடையும்
நாட்டிய பாங்கான நடையும்
உடைய பாவாய்..
என்னோடு பேசாதே
என்னை நீ நெருங்காதே
கண்ணோடு இமை போல
என்னோடு இருக்காதே..
ஏமாற்ற.. ஏமாற்ற..
விரட்ட.. விரட்ட..
தூய அன்பினை திரட்டிக் கொண்டு
என்னை நீ துரத்தாதே..
மனசாட்சி முன்னே
குற்றவாளியாக நிறுத்தாதே..
மறந்தும் திரும்பி வராதே - வந்தால்
வலி செய்வேன்.. வதை செய்வேன்..
கவி மொழி பேசி உன்னை - பொய்க்
காதலும் தான் செய்வேன்..
அதனால் தான் சொல்கிறேன்
அன்பே வராதே
தூய அன்பினை தராதே..
துயரினை பெறாதே..
நடுவுநிலை தவறாத
கொடும் பாதக
மனமென்னும் செங்கோல் மன்னன்
என்னை நிதம் வதை செய்கிறான்..
போதும் போதும் பெண்ணே..
உன் நேசம் போதும்..
நீயாகவே என்னை நீங்கிப் போய் விடு..
என் தொடர்பு எல்லைக்கப்பால்
என் நினைவுத் தொல்லைக்கப்பால்.. போ.. போய் விடு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...