Back

Philosophy

January 29, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

❤️😔❤️

நானூற்று முப்பத்திரண்டு முறை
தொடு திரையில்
உன் எண்ணை தடவி
அழைத்து அழைத்து
கட்டை விரலின்
தசைச் சவ்வு தேய்ந்து
களைத்து
படுக்கை விரிக்கப்படாமல்
வாசலில் சாய்க்கப்பட்டிருந்த
கயிற்று கட்டிலில்
மல்லாந்து படுத்து
பார்வைக் கெதிரே விரிந்திருந்த
இருள் குடையின்
வெளிச்சப் பொத்தல்களின் வழியே
பார்வையை இழையை நுழைத்து
தொலை பேசியின்
தொடர்பில் அகப்படாத உன்னை
வானூடுருவி தேடுகிறேன்..
இப்போ தகப்படுவாய்
பிறககப்படுவாய் என்ற
நம்பிக்கை யின் ஒளிக் கிற்றுகளோடு
பார்வையை முடுக்கி விட்டேன்...
பால்வெளிக்கப்பால் வரை
தேடியும் நீயகப்பட்ட பாடில்லை..
உன்னை கண்டெடுக்காமல்
இமைக் கூடு திரும்பிய
பார்வை இழைகளை புறக்கணித்து
இமைப் பீலிகள்
கதவடைத்து கொண்டன..
எங்கும் இருள்..
கண்ணுள் கவிழ்ந்த
குருட்டு இருளினூடே நின்று
ஒளி சிந்தி
கோரமாய் சிரிக்கிறாய்..
அப்பாடா..
கிடைத்து விட்டாய் நீ
போதும்..
இனி உன்னை பார்த்தபடியே
விழித்தலற்ற
ஊழி உறக்கம் தான்..
யாரிடவது என்னை புதைத்து விட மட்டும் சொல்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...