Back

Philosophy

January 29, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

என் ஒற்றை நிம்மதியே
எங்கே போயிருக்கிறாய்
என்னை விட்டு..

தாகம் கொண்ட
வாய்க்குள்ளிறங்கும் தண்ணீர் போல்
என்னில்
கிடு கிடுவென
அத்தனை துடிப்போடு
நுழைந்து ஊடுருவி
உள்ளமரந்து கொண்டு
தடயமில்லாமல் என்னை எரிக்கிறது
உன் நினைவுத் தழல்.

வா..

உன் இல்லாமை
என் ஒழுங்கீனமாக்குகிறது.
அன்பை வெறுக்கடிக்கிறது.
பிரிய பிசாசே.
என்னை பிரிந்திருக்கும் சாத்தனே.
பிடித்த ஒன்றின் இல்லாமை
இருக்கிற எல்லாத்தையும்
வெறுக்கடித்து
எதன் மீதும் பிரியமும் பிடிப்பும்
பற்றும் இல்லாத படி ஆக்கி விடும்.
தெரியாதா உனக்கு ?
இருந்து இருந்து
நான் இல்லாமல் போவதற்குள்
தனிமையின் சூன்ய பிடியில் இருந்து
என்னை விடுவிக்க
சீக்கிரம் வந்து தொலை தங்கமே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...