Philosophy
July 4, 2018
தத்துவம்
SHARE

#என்னடா_மசுரு_வாழ்க்கை
என்னடா மசுரு வாழ்கை என நிறைய பேர் புலம்ப கேட்டிருப்போம். அல்லது நாமே புலம்பி இருப்போம். ஆமாம் உண்மையிலே வாழ்கையில் ஒரு வகையில் மயிரொத்தது தான். பேன், பொடுகு, உதிர்தல்,நரை என என்னென்ன
பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் சரி கட்டி கொஞ்சமேனும் மண்டையில் மயிரோடிருந்தால் தான் அழகு. இந்த பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறதே என மொட்டை அடித்து விட்டாலும் அசிங்கம். அல்லது வழுக்கை
விழுந்த விட்டாலும் அசிங்கம். முன்னே போக விட்டு பின்னே மொட்டை வழுக்கை என கிண்டல் அடிப்பார்கள்.
வாழ்க்கையும் இது போலத்தான். தோல்வி, அவமானம் அபகரிப்பு, நிராகிரப்பு என ஆயிரமாயிரம் லொட்டு லொசுக்குகள் இருந்தாலும் அதை எல்லாம் சரி கட்டி, தாண்டி பொறுமையோடு வாழ்ந்து தொலைத்தால் தான் வாழ்க்கைக்கு
அழகு. நாம் பிறந்ததற்கும் அழகு. அதை விட்டு விட்டு இந்த வெங்காயத் தொல்லைகள் தாங்காமல் அழவோ தற்கொலையோ செய்து விட்டோமானால் அவ்வளவு தான். எல்லோர் வாயிலும் வசை மொழி தான். கோழை, பேடி என நிறைய
பட்டங்கள். உங்களின் சாவை சார்ந்த நிறைய புனைகதைகள். அதான் கட்டுக்கதைகள். எதற்கு இந்த எரிச்சலுட்டுகிற ஈர வெங்கயா பேச்சுகள் எல்லாம். ஏத்துகிறவர்கள் இருந்தாலும் ஏத்துவர்.இறந்தாலும் ஏத்துவர்.த்தா
மா என திட்டினாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஏத்துவார் ஏத்தட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் எனக்கென்ன என சுற்றித்திரிகிற நம்மூர் அரசியல் வாதிகளை போல இருந்து வாழ்ந்து அனுபவித்து விட்டு
சாவலாமே.
❣️ ❣️ ❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...