Philosophy
April 19, 2018
தத்துவம்
SHARE

ஏதோ எழு நாட்களுக்கு பிடித்த புத்தகத்தின் அட்டை படத்தை பதவிட வேண்டுமாமே... ரொம்ப நல்ல விசயம். வாசிப்பார்வத்தை தூண்டுகிற முயற்சி. இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த முகம்
தெரியாத நபருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும். தோழர் https://www.facebook.com/jeevi.ammu.1004 அவர்களின் வேண்டுதலை ஏற்று நானும் இன்னும் ஏழு நாட்களுக்கு எனக்கு பிடித்த
புத்தகங்களின் முகப்பை பதிவிடலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். அந்த எணணத்தின் முதல் ஆரம்பம் தான் இந்த "மெர்குரி பூக்கள்" வெகு நேர்த்தியான நாவல். கவித்துவமான
கதையோட்டம். கதை கம்யூனிசம் பேசுவது போல் தோன்றுவதாக எனக்கு முன் வாசித்தவர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்கும் அப்படி தோன்றினாலும் கதை கம்யூனிசத்தை கடந்து கவிதையையும்
காதலிசத்தையும் தான் அதிகமாக பேசுகிறது.கதையின் முதல் அத்தியாயத்தில் கதையின் முக்கிய பாத்திரமான கணேசன் தன் மனைவி யான சாவித்திரி யை தேவடியா என்று அழைத்து விட்டு அதற்கு
கொடுக்கிற விளக்கம், சங்கரன் சியாமளி யின் பொருந்தா காதல் இவற்றை எல்லாம் மனுசன் அவ்வளவு ரசனையோடு எழுதி இருப்பார். முடிந்தால் வாசித்து பாருங்கள். காதலும் கம்யூனிசமும் ஒரு
சேர அமைந்த நாவல்.#மெர்க்குரிபூக்கள். என்னை பதிவிடும் படி தோழர் ஜீவி வேண்டிகொண்டதை போல நானும் அண்ணன் @[100004368224571:2048:சுதர்சன் பாரதி] அவர்களை வேண்டிக்
கொள்கிறேன். நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...