Back
Philosophy
November 1, 2017
தத்துவம்
SHARE

சருகுதிர்தலின்
சப்தங்கள் கூட
மிரட்டுமிந்த மர்ம இரவில்
கொடும் விடம் சுமந்தூரும் நாகமென
படுக்கையில் உன்னை நினைத்தபடி
புரண்டுறங்க முயலுமென்
முதுகின் மேல் உதட்டால் ஊர்ந்தேறி
பின்னங்கழுத்தின் சதைக் கதுப்பை கடித்திழுத்து
புரட்டி கிடத்தி
இரத்தத்தில் நனைந்த என் மார்பள்ளத்தின்
நடுமத்தயில் முத்தமிட்டு
மெல்ல மேலேறி
என் உதட்டுக் கோப்பையில் கள்ளருந்தி வெறியேறி
என் அங்கமெங்கிலும்
வியாபித்து ஓய்ந்து என் மீதே உறங்கி போ.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...