Back

Philosophy

October 25, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

உன் காரணமற்ற நிரகாரிப்புகளின் கவலையை சுமந்த படியே என் கவிதைகள் உன் பார்வையில் வலம் வருகின்றன. சாதலின் மீதெனக்கு சத்தியமாய் தைரியமில்லை. உன் புறக்கணிப்பை பொருத்து கொண்டு
வாழ்தலும் பெரும்பாடாய் இருக்கிறது. காதலனே... நீ நிராகரிக்க நானென்ன உனக்கு ஒவ்வாத பொருளா? காரணம் சொல். எத்தனை தூரம் என்னை நேசித்தாய் நீ. உன் பிரியங்கள் எவ்வளவு பெரிதென
எனக்கு தெரியும். மறைக்காதே. என்னை மறுக்காதே. பைபிள் படிக்காதவனா நீ.? உன்னை மனதில் நினைத்த கணமே என் அத்தனையும் உன்னிடத்து இழந்து விட்டேன். எனக்குள்ளே அத்தனையும்
அரங்கேற்றி பார்த்து விட்டேன். புரிந்து கொள். புண்படுத்தாதே. பெண்ணுடல் மட்டுமல்ல மனமும் மென்மையானதே. எச்சில் பண்டமாய் என்னை எடுத்தெறியாதே. மிச்சமின்றி என்னை நீயே எடுத்து
கொள். வேண்டாமெனில் அச்சமின்றி என்னை உன் கைகளாலே கழுத்தறுத்து கொல். இதுவும் முடியாதென தான் முரண்டுபிடிப்பாய். நாணம் விட்டு கேட்கிறேன் பிச்சை யாயேனும் உன் பிரியங்களை கொடு
என் பிரியனே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...