Philosophy
September 29, 2017
தத்துவம்
SHARE

விளக்கம் கொடுத்தாலும் விளங்கி கொள்ள முடியாத கவிதையொன்று விமர்சகன் கையில் சிக்குண்டதை போல நான் உயிர் கொண்ட உணர்வு கொண்ட பொம்மையாய் காசுகொடுப்பார் கைகளிலெல்லாம் அகப்பட்டு
கொள்கிறேன். எல்லோரும் ஆடைக்குள் அம்மணம் தரிக்கிறார்கள் நான் அம்மணத்திற்குள் ஆடை தரிக்கிறேன். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது உங்களுக்கு எனக்கு ஊதியத்திற்கேற்ற உழைப்பு.
அவ்வளவே. யாருக்கு தெரியும் காசுக்கு போகும் எனக்குள்ளும் ஒரு கண்ணகி உயிர்த்திருப்பதை. காசு கொடுத்து என்னை கட்டிலில் இட்டு ஒன்பது துளை வழியே ஒரு சேர புணர்ந்தாலும்
ஒருவராலும் ஒரு போதும் என்னை மனம் புணர முடியாது. என்னோடு படுப்பது பலரானாலும் என்னை புணர்வது ஒருத்தனே. காம இச்சையோடு இந்திரர்கள் இரவும் பகலுமாய் என்னை தேடி வருவது உண்டு
ஆனால் என்னை கட்டிலில் இடுவதும் கட்டி அணைப்பதும் முட்டி மோதிப் புணர்வதும் என் கௌதமன் ஒருவனே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...