Back

Philosophy

September 28, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

வெள்ளணு சிவப்பணு என வேறுபாடின்றி என் உயிரணுக்கள் அத்தனையிலும் கலந்து போனவளே கண்ணீர் தரும் நினைவானவளே வழிப்போகனான எனக்கு நிழல் தரும் மரமானவளே என் மனமானவளே மாதவியே உன்னை
பிரிந்த என்னை என் மனதை தவிர யாரும் ஏன் நீயும் கூட குறை சொல்வதில்லையே. கண்ணகியோடிருத்தல் தான் நியாயமா.? உன்னோடு உடல் தேவை தீர்த்த என்னை உன் உத்தம நேசம் தினம் மனம்
கொள்ளுதடி. அவளை பிரிந்ததும் பிரிவதும் துரோகமானால் உன்னை பிரிவது என்ன? முடியவில்லை தோலும் எலும்பும் போர்த்திய உடலுக்குள் வில்லும் வாளும் இல்லாமலே நித்தம் யுத்தம். நீ
மாதவி அவள் கண்ணகி நான் கோவலன் என்றான பின் என் மீது பழிசொல்லப் போகிற கொல்லன் யார்? என்னை கொன்று வரச் சொல்லும் பாண்டியன் யார்? எங்கே அவர்கள்? என்னால் ஆயுள் தண்டனை எல்லாம்
அனுபவிக்க முடியாதடி.... உனக்கு தெரியுமானால் அனுப்பி வை அவர்களை சீக்கிரம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...