Back

Philosophy

August 13, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

இருட்டு வீட்டில்
ஏற்றிய விளக்கு வெளிச்சமாய்
இதய வெளி எங்கிலும்
படர்ந்தவளே

எரியுஞ்சுடரென இடர் தந்தாலும்
மடமை கொண்டு மனம் ததும்ப
காதல் செய்கிறாய்.....

யாரடி நீ....

நான் தேடும் நச்செள்ளை யா?
இல்லை உனக்கு
கவிதையை ரசிக்க மட்டும் தானே தெரியும்.

பிறகு யார் நீ?
கணவனுக்காய்
காலனோடு சண்டையிட்ட சகுந்தலையா?
இல்லை
உனக்கு அன்பை தவிர வேறேதும் தெரியாதே.

என் செல்லச் சிநேகிதியே
சொல்.....
யார்..நீ....
ஏன் இத்தனை நேசம்
உன் அன்பில்
என் உயிரணு அத்தனையும் சில்லிடுகிறது.

ஹரின் அனுபவித்த
திலோத்தியின் காதலாய்
தீராத நேசம் செய்ய
எப்படி இயல்கிறது
உன்னால்..?

அடியே
எனை தாங்கும் ஆலம் விழுதே....

நீ யாரோ
நான் யாரோ என்ற
நிலையில் தான்
நீயும் நானும் என்றாலும்

உன் நினைவுகள்
என்றும் நெஞ்சிருந்து நீங்காதடி
என் யுகநேசியே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...