Back

Philosophy

November 20, 2015

தத்துவம்

SHARE

தத்துவம்

!................முடவன்.................!
உறுப்பிழந்த என்னை
"முடவன்" எனும்
மூடர்களே
முயற்சிக்க தெரிந்தும்
முயற்சிக்காமல்
உயிரிலே ஊனம் சுமப்பவர்களை என்ன வென்று அழைப்பீர்கள்?
சிறு காயம் ஆனாலே
கட்டிட்டுக் கொண்டு
கட்டுண்டு போகும்
சராசரி மனிதன் அல்ல நான்
கைகளே இல்லை எனினும்
காலம் பேசும்
புது சரித்திரம்
படைப்பேன் காண்...!
என்னை பார்த்து
பாவம் என்று
பரிவு கொள்ளும்
அனைவருக்கும்
நினைவில் நிற்கும்படி
ஒன்றுரைக்கிறேன்
என்னை "முடவன்"
என்று மட்டுல்ல
"மாற்றுத்திறனாளி" என்று
மாற்றி அழைத்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள மாட்டேன்
ஏனென்றால்
உறுப்பிழந்தவன் நான்
இந்த "உலகை மாற்றும் திறனாளி"....!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...