Back

Philosophy

July 24, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த என்னில் ஏனிந்த மாற்றங்களோ நானறியேன்.
இப்போது இந்த உலகத்தின் அத்தனை நடவடிக்கைகளுமே எனக்கு அநியாயமாக படுகிறது. நீங்கள் சொல்லும் அத்தனை ஆசைகளும் ஏக்கங்களும் எனக்குள்ளும் இருக்கிறது. ஆம் உறவுகளை வெறுக்கும் என்னில் அன்பிற்கான
தேடுதலும் இருந்தது. இன்னும் கூட இருக்கிறது. அன்பு தான் உலகில் அமைதியை நிலைநாட்டும்.எல்லாம் அன்பின் செயல் தான். ஆனால் இந்த கலப்பட உலகில் அன்பும் கூட போலியானதாகத் தான் இருக்கிறது. அதை விடுங்கள்.
இத்தனை பேசும் என்னால் எதையும் தட்டி கேட்க முடியவில்லை யாருக்கும் உதவ முடியவில்லை. இதற்கு காரணம் பணமும் உறவின் மீதுள்ள பற்றும் தான். எல்லாருடைய தேவையும் பணமாக இருப்பதால் யாருக்கும் என்னால் உதவ
முடியவில்லை. எதையும் தட்டி கேட்க முடியாததற்கு காரணம் உறவுகள் இன்னும் குறிப்பிட்டு சொன்னால் என் குடும்பம் என் அப்பா, அம்மா, அக்கா. நான் தட்டி கேட்கபோனால் எனக்கெதும் ஆகிடுமோ என்ற அவர்களின்
பயமும் எனக்கெதாவது ஆகி விட்டால் இத்தனை நாள் அவர்கள் காட்டிய அன்பையும் அவர்கள் எனக்கு செய்த இதர தேவைகளையும் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு நான் சோறுபோடுவேன் என்ற நம்பிக்கையும் கொன்று
என்னோடே அவற்றை சேர்த்து புதைத்து கொள்வேனோ என்ற பயமும் தான். இது பயமில்லை என் போலிக்பற்பிதம் என் சுயநலம் இன்னும் சொல்லப்போனால் என் இயலாமை.அவ்வளவு தான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...