Back

Philosophy

July 3, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

நான் சொந்தமாக்கிகொள்ள நினைக்கும் என் சோகப் பொழுதே வா.... வந்தென்னை என்னை ஆரத் தழுவு... உன்னோடு அளவளாவுகிற போதே என் உறுப்புகளும் உணர்வுகளும் உயிர்க்கின்றன. கனவிலும்
அடையப் பெறாத ஞானத்தை கணப்பொழுதில் தந்து போகிறாய் நீ நீயொரு பெண்ணாயிருந்து விடின் உன்னோடே கழிப்பேன் என் உயிருள்ள நிமிசங்களை. ஆமாம் உன் மீது அத்தனை காதல் எனக்கு. மனிதனை
நேசித்து மனம் நோவதினும் உனை காதலித்து தினம் உயிரெழுதுகிறேன். அடியே என் சோக சொர்க்கமே.... எத்தனை இனியவள் நீ நானே விலக்கி வைத்தும் விருப்பம் கொண்டு நெருங்கி வந்து
நெஞ்சினிக்கிறாய். அழுவதும் சுகமென ஆக்கினாய். தழுவி தழுவி கண்ணின் கரையனைத்தும் நீக்கினாய். என் ஏகாந்த காதலே.... கடன் வாங்கி கவலை பட்டேனும் உன்னை கட்டி தழுவி தினம்
காதலுறும் என்னோடு எப்போதும் உடனிரு.. எப்போதேனும் பிரிய நேருமானால் அப்போதே என் உயிரறு என் பொல்லாதவளே என்னோடு இல்லாதவளே.

காற்றோடு கலந்திட்ட கானம் போல் காணாமல் போகின்றேன். சேற்றோடு சேர்ந்து நாறும் செந்தாமரை ஆகின்றேன். எந்நாளும் உனை எண்ணி எனக்குள்ளே நோகின்றேன். வெந்தாலும் மணக்கும் சந்தனம்
போல் சந்தம் பாடிச் சாகின்றேன். பொய்யில்லை நானும் பிணம் தான் எப்படி வாழ்கின்றேன். மெய்தானடி இப்போது நீயில்லை அதனால் வீழ்கின்றேன்.

என் தகப்பனுக்காய் நானெழுதும் முதல் கவிதை இது. கண்டு பூத்து காணாது காய்க்கின்ற கள்ளச்செடியன்ன உள்ளுக்குள் காதல் வைத்து கண்பார்க்க கடிந்து பேசி காணாத நேரம் காதல் செய்யும்
கள்ள நேசனே.....! என் ஆகாயம் ஆதாயம் எல்லாமும் நீயானாய். "எனக்கு சொத்து பத்தெல்லாம் எம்மக்க குட்டிக தானு மார் தட்டி சொன்னவனே" என் உள்ளும் புறமும் சொல்லும்
செயலும் கருவும் கவியும் குருவும் திருவும் யாதும் நீயானாய்.... எனை ஈனாத தாயானாய்...

கோல மயிலாட கோபுர நிழலாட நினைவு நீண்டோட நிற்க நிழல் தேட நீலக் குயில் பாட மலராய் மனம் வாட அடி நெஞ்சில் சுமை கூட அது அன்பின் துணை நாட துணைக்கு யாருமில்லை துயர் வடிக்க
கண்ணில் நீருமில்லை. என் வலிக்கு மருந்துமில்லை இந்த வரியை மிஞ்சும் விருந்துமில்லை. துயரக் கண்களுக்கு துளிகள் பாரமில்லை. அயர்ந்து தூங்கினேன் அந்தக் கனவுகளும் தூரமில்லை.
உயர்ந்து பறக்காத்தான் எனக்கொரு சிறகுமில்லை. உயிர் பிரிந்து கிடக்கிறேன் எனை எரிக்க விறகுமில்லை.

யுத்தப் பொழுதில்லை ரத்தம் கசிகிறேன். சத்தம் வரவில்லை கத்தி அழுகிறேன். சித்தத் தெளிவில்லை சிரித்தெழுகிறேன். தத்தத்தனனனா தத்தத்தனனனா....................

நான் சொந்தமாக்கிகொள்ள நினைக்கும் என் சோகப் பொழுதே வா.... வந்தென்னை என்னை ஆரத் தழுவு... உன்னோடு அளவளாவுகிற போதே என் உறுப்புகளும் உணர்வுகளும் உயிர்க்கின்றன. கனவிலும்
அடையப் பெறாத ஞானத்தை கணப்பொழுதில் தந்து போகிறாய் நீ நீயொரு பெண்ணாயிருந்து விடின் உன்னோடே கழிப்பேன் என் உயிருள்ள நிமிசங்களை. ஆமாம் உன் மீது அத்தனை காதல் எனக்கு. மனிதனை
நேசித்து மனம் நோவதினும் உனை காதலித்து தினம் உயிரெழுதுகிறேன். அடியே என் சோக சொர்க்கமே.... எத்தனை இனியவள் நீ நானே விலக்கி வைத்தும் விருப்பம் கொண்டு நெருங்கி வந்து
நெஞ்சினிக்கிறாய். அழுவதும் சுகமென ஆக்கினாய். தழுவி தழுவி கண்ணின் கரையனைத்தும் நீக்கினாய். என் ஏகாந்த காதலே.... கடன் வாங்கி கவலை பட்டேனும் உன்னை கட்டி தழுவி தினம்
காதலுறும் என்னோடு எப்போதும் உடனிரு.. எப்போதேனும் பிரிய நேருமானால் அப்போதே என் உயிரறு என் பொல்லாதவளே என்னோடு இல்லாதவளே.

காற்றோடு கலந்திட்ட கானம் போல் காணாமல் போகின்றேன். சேற்றோடு சேர்ந்து நாறும் செந்தாமரை ஆகின்றேன். எந்நாளும் உனை எண்ணி எனக்குள்ளே நோகின்றேன். வெந்தாலும் மணக்கும் சந்தனம்
போல் சந்தம் பாடிச் சாகின்றேன். பொய்யில்லை நானும் பிணம் தான் எப்படி வாழ்கின்றேன். மெய்தானடி இப்போது நீயில்லை அதனால் வீழ்கின்றேன்.

என் தகப்பனுக்காய் நானெழுதும் முதல் கவிதை இது. கண்டு பூத்து காணாது காய்க்கின்ற கள்ளச்செடியன்ன உள்ளுக்குள் காதல் வைத்து கண்பார்க்க கடிந்து பேசி காணாத நேரம் காதல் செய்யும்
கள்ள நேசனே.....! என் ஆகாயம் ஆதாயம் எல்லாமும் நீயானாய். "எனக்கு சொத்து பத்தெல்லாம் எம்மக்க குட்டிக தானு மார் தட்டி சொன்னவனே" என் உள்ளும் புறமும் சொல்லும்
செயலும் கருவும் கவியும் குருவும் திருவும் யாதும் நீயானாய்.... எனை ஈனாத தாயானாய்...

கோல மயிலாட கோபுர நிழலாட நினைவு நீண்டோட நிற்க நிழல் தேட நீலக் குயில் பாட மலராய் மனம் வாட அடி நெஞ்சில் சுமை கூட அது அன்பின் துணை நாட துணைக்கு யாருமில்லை துயர் வடிக்க
கண்ணில் நீருமில்லை. என் வலிக்கு மருந்துமில்லை இந்த வரியை மிஞ்சும் விருந்துமில்லை. துயரக் கண்களுக்கு துளிகள் பாரமில்லை. அயர்ந்து தூங்கினேன் அந்தக் கனவுகளும் தூரமில்லை.
உயர்ந்து பறக்காத்தான் எனக்கொரு சிறகுமில்லை. உயிர் பிரிந்து கிடக்கிறேன் எனை எரிக்க விறகுமில்லை.

யுத்தப் பொழுதில்லை ரத்தம் கசிகிறேன். சத்தம் வரவில்லை கத்தி அழுகிறேன். சித்தத் தெளிவில்லை சிரித்தெழுகிறேன். தத்தத்தனனனா தத்தத்தனனனா....................

Ajithkumar இன் ஜூன் மாத நினைவுகள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...