Back

Philosophy

July 1, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

நான் மணக்க மனம் கொண்ட மரணமே என் மார் தழுவு. உன் மடியில் கிடத்தி என்னை உறங்க வை. தாலாட்டு தலை கோது. என் தாய் நிகர்த்தவளல்லவா நீ.? காத்து கிடக்கிறேன் என்னை நீ கைத்தழுவும்
கணமெண்ணி. முற்றும் மறந்து துறந்த முக்தி நிலையல்லவா நீ.? எளிதில் கிட்டாத ஞானப் பொக்கிஷமல்லவா நீ? இந்த பொய்யுடலின் நிர்வாண அழகல்லவா நீ? நான் பெற நினைக்கும் பேரின்பமல்லவா
நீ? உன்னை புரட்டி சுகிக்க இந்த புலவனுக்கொரு வாய்ப்பு கொடு. உன் முதுகுக்கு பின்னிருக்கும் முடிச்சுகளை அவிழ்க்க அனுமதி கொடு. என் புதிர் பொக்கிஷமே என்னை புணர். உன்னில்
என்னை உலவ விடு. உன் மர்மங்களில் உன் மணளானை துய்க்க விடு. எனக்கு ஆத்ம சுதந்திரம் தந்து உன் அழகியலில் என்னை அலையவிடு. என்னில் நீ பள்ளி கொள். நான் கண்டறியா சொர்க்க பூமி
கூட்டிச் செல். உனக்கான என் பரிசு என் உடல் கூட்டினுள். அதை தர மறுக்கும் உடலை தயக்கம் வேண்டாம் கொல். உன் பாசக்கயிற் கொண்டென்னை கட்டி இழு. என்னை வெற்றி கொண்டு நீ மேலெழு.
என் சுவாசத்தை உன் சுவாசமென உள்ளிழு. ஆத்ம தோல்வியின் அனுபவம் போதி. அதுவே நான் உயிர் கொண்டதன் நீதி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...