Back
Philosophy
June 23, 2017
தத்துவம்
SHARE

பல வீட்டில் தட்டேந்தியும்
பசிக்கு ஒரு பருக்கை சோறும்
கிடைக்காத
பல வருட தாடி மழிக்காத
பிச்சைக்காரன் போல்
கருப்பான பட்டாம்பூச்சி
எங்கிருந்தோ
தள்ளாடிடும் தொனியில்
பறந்து வந்து
அவன் வாகன கண்ணாடியில்
மோதி விழுவதை
கண்டும் காணாமல்
காற்றை கிழித்தபடி வேகமாக போகிறான்
அடுத்து அவனுக்கொரு
ஆபத்திருப்பதை அறியாமல்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...