Back

Philosophy

June 17, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

தொலைந்தேன். என்னை ஏனோ நானே தொலைத்தேன். தேடுவார் யாருமில்லை வாடினேன். வருத்தம் பாடினேன். சோக கூத்தாடினேன். சொர்க்க த்தை பூமியிலே தேடினேன். அடைந்த பாடில்லை மரணம்
நாடினேன். மரணமும் என்னை ஒதுக்கி வைத்தது. அதற்கும் என் மீது ஆசையில்லை. . மரணமும் என்னை தேடாததெண்ணி மனமொடிந்தேன். மழை நனைந்த மண்வீடாய் உள்ளுக்குள் இடிந்தேன். எரிந்த
மூங்கில் காடாய் இதயத்தில் இருள் படிந்தது. இமை வழி சுமை வடிந்தது. குருட்டு விழிகளுக்கு இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் வேறுபாடு தெரியாததை போல் எனக்கு எதற்குமே வேறுபாடு
தெரியாமல் போனது. உணர்ச்சி செத்தவனானேன். உயிர் இருப்பதையும் உணரமுடியவில்லை. இதோ இப்போது இறந்து போனது போல் ஒரு நினைவு. என் தாடையை தலையோடு சேர்த்து யாரோ கட்டுகிறார்கள்.
என் கால் கட்டை விரல்களும் கட்டப்படுகின்றன. எல்லோரும் என்னை தீண்டுகிறார்கள் எனக்குள் எந்த உணர்ச்சியும் இல்லை. எல்லோரும் அழுகிறார்கள் எந்த ஓலமும் எனக்கு கேட்கவில்லை.
எனக்கு சிரிப்பாயிருக்கிறது. நான் இங்கு உங்களோடு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு யார் செத்ததாய் அழுகிறார்கள் அவர்கள்?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...