Back

Philosophy

September 23, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

சாலையோரத்தில் சாயவும் வழியில்லாமல் அழுகிற பிச்சைகரானின் அழுக்கு கலந்த உப்புக்கண்ணீரில் கட்டிலிருந்தும் காமம் தீர்க்க கண்டாளைத் தேடும் காமுகனின் காமத்தண்ணீரில் தானே
கேவலப்பட ஜீவனாயிருந்தாலும் எவனோ ஒருவனை ஏசித் துப்பும் எச்சில் துளிகளில் குடித்தனம் செய்ய வக்கில்லாமல் குடிகாரத் தனம் தொடரும் குடிமகன்களின் குமட்டல் குமிழிகளில் நூறு
வீடேறியும் ஒரு வாய் சோறில்லாமல் சாக்கடைத் தண்ணியால் சாண் வயிறு நிரப்பியவனின் மூத்திரத்தில் ஊரூராய் கோவில் கோவிலாய் அலைந்து களைத்து கடைசியில் குல சாமி வேண்டுதலில் பிறந்த
பிள்ளை சாதிமாறி காதலிக்க அவள் இரத்தம் குடிக்க துடிக்கும் அப்பன்களின் ஆத்திரத்தில் உழவுக்கு உதவாமல் அணைகளுக்குள் அடைப்பட்டு கசியும் காவிரித் தண்ணீரில் நனைந்து போகிறது
என் ராத்திரி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...