Back

Philosophy

May 21, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

ஏன் கவியெழுத வில்லை என்றாள்?
கருப்பொருளில்லை என்று
காரணம் கற்பித்தேன்.
வேண்டுமென்றால்
"நீயேதேனும் தாயேன்"என்றேன்.
உடனே உணர்ச்சி வயப்ப்டு
"நானா? நானா?" என்று
புருவங்கள் ரெண்டும்
கேள்விக்குறியாக
விழிகளில் விசாலமான
வியப்பு காட்டினாள்
நான் ஏதோ
தவறாக கேட்டதைப்போல.
கடைசியில் "அழகிய மை" என்று
நான் பழகாத சொல்லை
பாடுபொருளாய் கொடுத்து
பாடுங்கள் என்றாள்.
ஐயரி விழிக்காரி
அவளுக்காய் பாடுகிறேன்.
#அழகிய_மை
அழகான மை யென்றால்
அது நீ யின்றி
வேறென்ன
நிலா பெண்ணே.
உன்னில் உள்ள
அத்தனை மை மீதும்
நான் மையல் கொண்டேன்
¤மெல்லுடலிகளை விட
மென்"மை" யானவள் நீ
¤பெண்"மை"க்கு உகந்த
உதாரணம் நீ
¤தாய்"மை" க்கு
உனக்கு நீகர் நீயே
¤வாய்"மை" வாழ்வு கொடுத்தவளும் நீயே.
¤என் "மை"யலுணர்வை
மரிக்கவிடாது தாயன்போடு
தத்தெடுத்து கொண்டவளும்
நீயே நீயே நீயே
என் புல"மை"யும் நீயே
என் இள"மை"யும் நீயே....

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...