Short story
September 30, 2022
சிறுகதை
SHARE

நகக் கண்ணில் ரத்தமொழுக மண்ணகன்றெடுத்த கருணைக் கிழங்கு நீ யென உள்ளங்கையில் ஏந்தியுயர்த்தி ஆடிக்களித்து அகம் மகிழ்ந்தேன். மற்றும் என்னினும் அதிகமாய் உன்னை நம்பி
இருந்தேன். வெறுமையின் அமிலமரித்த மன இரப்பையை நீர்மை பொங்கும் அன்பினால் நிரப்ப வந்தவள் நீ என பூரித்து கிடந்தேன். நீ கை நீட்டிய கோப்பைகளை என்னவென்றும் கேளாமல் பருகி
சிரித்தேன். உன் எளிய சொற்களை அன்பின் பொய்களை மனதில் நிரப்பி வைத்து உண்டியல் காசாய் உலுக்கி உலுக்கி குதுகலித்தேன். ஓ... அன்பு சுரந்த உயிர் சுனையே.. நீ முத்தமிட்ட
உதட்டில் இன்று மரணம் சம்மனிட்டு அமர்ந்திருக்கிறநு. நீ பொருத்தி விட்ட அன்பின் சிறகுகள் உதிர்ந்து எறும்புக்கிரையாகிக் கொண்டிருக்கின்றன. அதோ... தன் நகங்களில் பற்றி சுமந்து
பறக்கிற பிரிவுப் பறவை சற்றுப் பொழுதில் என்னோடு நம் உறவையும் குடல் கிழி பட கொத்தி உண்ணப் போகிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...