Back

Short story

September 20, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

சரணடைதல் என்பது அன்பின் உச்ச நிலை என்றே கருதுகிறேன். அதுவே அல்லது அவரே கதி என்று சரணடைதலில் ஒரு பூரணம் இருக்கிறது. தான் என்ற கர்வம் துறந்து தன்னை அப்படியே எடுத்து ஒரு
அன்பின் கைகளில் கொடுத்து விடுதலில் இருக்கிற நிம்மதி வேறெதிலும் இல்லை. அப்படிபட்ட வலுவான அன்பின் கைகளில் தன்னை ஒப்படைத்து விடவே மனிதன் தவித்தலைகிறான். அதற்கே பக்தி
என்றும் கடவுள் என்றும் நெஞ்சுருகி ஏங்குகிறேன். ஆனால், இதுவரையில் யாரும் அப்படியான ஒரு அன்பின் கைகளைச் சென்று சேர்ந்ததே இல்லை. எனினும் நானும், அன்பின் மலர்கள் பூத்துக்
குலுங்குமொரு கையில் கூடடையவே வேண்டுகிறேன். அப்படி, பூரண அன்பின் முன் மண்டியிட்டு சரணடைதலின் சுவையறியும் பொருட்டு எனக்கே எனக்கென்று நானே ஏற்பாடு செய்து கொண்ட பாத்திரமே
என் சகி - கண்மணி. இன்னும், "உன்னை விட எனக்கு.. யாரும் இல்லை துணைக்கு" என்று ராஜாவை கேட்கும் போதெல்லாம் காற்றின் விரல் பட்ட நீர்கனக்கும் மேகமாய் உள்ளம்
கரையத்தொடங்கி விடுகிறது. இன்னும் "உன் திருக்கரம் எனை அரவணைத் துனதருள் பெற " என்ற வரியை கேட்கும் போதும் "நீயல்லாமல் எது நிம்மதி நீயே என்றும் என்
சந்நிதி" என்றொலிக்கும் போதும் என்னை அரவணைக்கும் அன்பின் கரம் எதுவோ என்று உள்ளம் ஏங்கத் தொடங்கி விடுகிறது. சுதந்திரம் என்ன பெரிய சுதந்திரம்? நமக்கே நமக்கான அன்பின்
கைகளில் பத்திரப்படுவதை விட சுதந்திரம் ஒன்றும் பெரிய விசயமே இல்லை. இந்த வாழ்க்கை நம்மை எவ்வளவோ அலைக்கிறது. அடித்து வதைக்கிறது. தென்னங் கீற்று போல கீழும் மேலுமாக
கிழித்தெரிகிறது. இருந்தும், இத்தனை துயரங்களுக்கு மத்தியில் நாம் வாழந்து கொண்டிருப்பதெலல்லாம் எங்கோ இருந்து கிடைக்கிற கொஞ்சூண்டு அன்பின் நிழலில் தானே?ஆமாம் அன்பின் ருசி
கண்ட ஜீவனுக்கு அன்பினை விட வேறொன்றுமே பெரிதாக தெரிவதில்லை. நான் அன்பின் ருசி கண்ட மிருகம். அதனாலே தான் வயிறுக்கு பாட்டுக்கே வாய் பாட்டு படித்துக் கொண்டிருக்கிற
நிலையிலும் அன்பு அன்பு என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிலம் கடந்த, பால் கடந்த, திணை பேதங் கடந்த, எல்லாமுமாய் எனது பரம்பொருளாய் நான் சுற்றி சுழல, நான் என்ற
பிரக்ஞையை மறக்கடிக்கும் ஒரு பேரன்பு வேண்டும். அந்த எனக்கான அன்பு எங்கோ அது யாரோ? எப்படியாயினும், அன்பின் அருகாமையில் இருக்கிற போது கிடைக்கிற உள்ளமைதி மரணத்திற்கும்
அப்பாற்பட்டது. அன்பின் தண்நிழலை எது ஒன்றாலும் தந்து விட முடியாது. உங்களுக்கான அன்பின் கைகளில் சரணடைகிற வரையிலும் நான் சொல்வதெல்லாம் பிதற்றல் போலத் தான் தோன்றும்.
காத்திருங்கள். அன்பு எல்லா வற்றையும் புரிய வைக்கும். ,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...