Short story
September 16, 2021
சிறுகதை
SHARE

உண்மை என்பதே மாயை என்கிற போது, உண்ணையில் மாயையாக இருக்கிற மாயையை பற்றிக் கொண்டே வாழ்வது அவ்வளவு சிரமமானதில்லை. நிஜ வாழ்வின் வலிகளில் இருந்தும் ஏமாற்றங்களில் இருந்தும்
தப்பித்து இளைப்பாற கற்பனை மிகப்பெரிய துணையாய் இருக்கிறது. நான் கற்பனையில் மிதந்து தவழ்ந்து கற்பனையிலே காதலித்து வாழ்பவன். ஏன் என் சகி கூட எனது கற்பனையின் கர்ப்பத்தில்
இருந்து பிறந்த காதல் குழந்தையே. எனது தனிமையை கற்பனை அழகாக்குகிறது. வாசித்து யோசித்து தீனிப் போட்டு வளர்க்கிற என் கற்பனையே,ஒரு சல்லிக் காசுக்கும் பிரயோசனமில்லாத என்னை
கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றி இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எனக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஏனென்றால், இப்போதும் எப்போதும் புத்தகங்களோடு
கழிகிற தனிமையில் விளையும் கற்பனையே என்னிந்த வழிப்போக்க வாழ்வின் பிரதானத் துணை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...