Back

Short story

August 24, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

அறைக்குள் நுழைந்த போது மணி பத்து. ஜன்னல் வழியாக வெளியேப் பார்க்கிறேன். ஒரே இருள். இரவு தான் எத்தனை வித்தியாசமானது. சகலத்தையும் இருட்டடிப்பு செய்து நிறம் மாற்றி விடுகிறது. பனிக் காற்று ஈரமாய்
முகம் தொடுகிறது. லேசாக உடலில் குளிர் பரவுகிறது. துரத்தில் மரங்களின் சல சலப் போசை. கூடடைந்த பறவைகள் கீச்சிடுகின்றன. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங்கள் தெரிந்தன. அழகான அதே சமயம்
அசந்தர்ப்பமான சூழ்நிலை. உள்ளுக்குள் ஏதோ அச்ச உணர்ச்சி. தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்துக் கொண்டேன். பெட்டில் உட்கார்ந்த படி அவள் பாட்டுக்கு எதெதோ சொல்கிறாள். அவளைப் பார்க்கிறேன். உதடு
ஈரச்சிவப்பாக இருக்கிறது. இந்தப் பிறந்த நாளை அவளால் மறக்க முடியாதாம். எனக்கும் தான் என்று எனக்குள்ளேயேச் சொல்லிக் கொண்டேன். என்னிடம் கேட்டு சண்டைக் கட்டி வாங்கிய புடவையை வேறு கட்டி இருந்தாள்.
உலகிலேயே ரொம்ப கவர்ச்சியான ஆடை என்றால் அது சேலை தான். பாதி காட்டி பாதி மறைத்து ஆர்வத்தை தூண்டி விடும். அது வேறு ஒரு புறமாய் விலகி இடுப்பையும் மாரையும் ஓரமாய் காட்டிக் கொண்டிருந்தது. நான்
முகத்தைப் போர்த்திக் கொண்டேன். அவள் பேச்சு தொடர்ந்து. என் அவசரமான பேச்சும் செயல்பாடும் பிடித்திருக்கிறதாம். மழிக்காத தாடியும் மீசையும் பிடித்திருக்கிறதாம். என் புறத்தோற்றத்தை முதல் முறையாக ஒரு
பெண் புகழுகிறாள். என் தோற்றத்தை இதுவரை விமர்சித்தவர்களே அதிகம்.

  • நித்தியா என்கிற சிறுகதையில் இருந்து,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...