Back

Short story

August 21, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

உனக்கான
அத்தனை வாசல்களையும்
திறந்தே வைத்திருந்தேன்

உன்னை வரவேற்க
தட்டு நிறைய மலர்களையும்
குடுவை நிறைய பன்னீரையும்
சிமிழ்கள் வழிய சந்தனத்தையும்
சிகப்பையும்
நிறைத்து வைத்திருந்தேன்.

வழி மீது உயிர் வைத்துக் காத்திருந்தேன்.
பகலின் வெம்மையிலும்
இரவின் குளிரிலும்
என்னுயிர் கொதித்து உறைந்து
தவித்து தத்தளித்து கொண்டிருக்க
இன்று
நீ வருவதற்கான வாசலின் வழியே
மரணம் வந்து நுழைகிறது.

சரி இப்போதேனும் வா
என் மரணத்தை
மலர் தூவி வரவேற்க ஆளில்லை.
அச்சப்படாதே
என் வீட்டில் நான் இல்லை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...