Short story
May 3, 2021
சிறுகதை
SHARE

(பழைய கவிதை தான். பூனைய நெனைச்சதும் பகிரத் தோனுச்சு) #அவளும்_பூனாத்தியும் #சிப்பிக்குள்_சிந்தா_மழை அந்த வீட்டில் இந்த இருவர் மட்டும் தான் இருந்தார்கள். அந்த
பூனாத்தியின் மேல் அவளுக்கு அரக்க பிரியம். அவள் மீது அந்த பூனைக்கு புலியின் கோபம். அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு நாய் தன் குட்டியை கவ்விச் செல்வதை போல் லாவகமாய்
கழுத்தைப் பிடித்துயர்த்துவாள். மீசை முடிகளை இருகை விரல்களாலும் இறுக பற்றி இழுப்பாள். மீயாவ் மீயாவ் என்றலறவிட்டு முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவாள். வெறியேறிய பூனை அவள்
வெளிறிய மூகக்கை வெறிக்க வெறிக்க கடிக்கும். அவளுக்கு வலிக்காது. அவளை பார்த்தாலே பூனை துரத்தும் எலியென புயல் வேகத்தில் ஓடும் அந்த பூனை. எப்படியேனும் அவளிடமிருந்து தப்ப
முயன்று தப்பு செய்ததை போல் மாட்டிக் கொள்ளும். மாட்டி கொண்ட பூனையின் வாலை நீவி விட்டு முன்னங் கால்களை பிடித்து நடனமாட்டுவாள். அதன் கால் நகங்களுக்கு வண்ணப் பூச்சிடுவாள்.
அவள் அலங்காரம் செய்யும் போதெல்லாம் அதற்கும் அலங்காரம் செய்து அழகு பார்ப்பாள். ஈரமாயிருக்கும் அதன் மூக்கோடு மூக்கு வைத்து முட்டி விளையாடுவாள். பாவமாய் தான் இருக்கும்.
அவள் பாசப் பைத்தியம். உறங்கும் போது கூட மார் மீது கிடத்தியே உறங்குவாள். ரத்தம் வழிய அது செய்யும் நகக் கீறலில் கிறு கிறுத்து போவாள். இன்றும் மார் மீது உறங்க ஏறிய பூனை
ரத்த வெள்ளத்தில் உறங்கி கிடந்த அவளை ரணப்படுத்தி மேலும் ரத்தம் காயம் செய்கிறது. கோபமாகவே இருக்கும் அந்த பூனையிடத்தில் இப்போது அன்பு இருந்தது ஆனால் அவளிடத்தில் அசைவோ எந்த
வித எதிர் வினையோ இல்லை. அழத் தெரியாத அந்த பூனைக்கு அவளை காயம் செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. பாவம் இத்தனை நாள் அவளோடு இருந்த அந்த பூனைக்கு தெரியாதா ஒன்று இரண்டு
நாள் முந்தி அந்த வீட்டை கடந்து போன சில ஆண்களுக்கு தெரிந்திருக்கிறது அவள் பெண் என்று.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...