Back

Short story

May 15, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

ஒழிக ஒழிக என்று கோசமிட்டால் ஒழிந்து விடுமா சாதி?

கல்லெறியாமல், விழு விழு என்று சொல்லிக் கொண்டிருந்தால் காய் சுலபத்தில் விழுமா என்ன?

சாதி என்பதென்ன சிறிய கட்டமைப்பா? இது ஒரு நரகக் கோட்டை. பிறப்போடு பிணைத்து வைக்கப்பட்ட விசயம். அறிவே இல்லாத எவனோ மூட நம்பிக்கைகளையும் கடவுளையும் சொல்லி தூவி விட்டுப் போன ஒரு நாசக்கார நச்சுக்
கிருமி. அதன் கட்டமைப்புகளைத் தகர்த்தெறிய தேர்ந்த கல்வியும் தெளிந்த அறிவும் அதோடு அரசியல் வலுவும் வேண்டும். அண்ணலைப் போல ஆழமான ஆராய்ச்சி மற்றும் பகுத்தறிவோடான செயல் பாடு வேண்டும். ஒரு பெரிய
பூதாகரமான கட்டமைப்பை எதிர்த்து போராடுவதற்கு தன்னை பெரிய அளவில் வலுவாக்கிக் கொள்ள வேண்டும். இது வாதத்தாலோ ஆயுதங்களாலோ அழிக்க முடிகிற விசயம் இல்லை. அறிவால் புத்திசாலித் தனத்தால் எதிர்க்கப்பட
வேண்டிய விசயம். சாதியை அழிக்கிற / எதிர்க்கிற முயற்சி ஒரு சிறு கடப்பாரையால் கிணறு தோண்டுவது போல. எளிதில் முடிகிற காரியம் இல்லை என்றாலும் கை விட்டு விடக் கூடாது. தொடர்ந்து மற்றும் ஒன்று கூடி
போராட வேண்டும். சாதி விசம் இல்லாத அந்த கிணற்றின் சுத்தமான நீர் சுரப்பை நீங்கள் பருக முடியா விட்டாலும் உங்கள் வருங்கால சந்ததி பருகும்.

கற்றுத் தேர்ந்து
களம் நின்றெதிர்.
முற்றும் அழியாது போனாலும் - கொஞ்சமேனும்
மட்டுப்படும் அதன் வீர்யம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...