Back

Short story

May 15, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

காதல் அமுதுண்ண யார் முந்துவது நம்முள். கர்வம் நம்மினும் முந்தி நம் காதலை உண்டு ஆல விருட்சமென கோர உருவங் கொண்டுயரந்து நிற்கிறது. பெரு மழையீனும் மேகம் போல ஆண்மை
எப்போதுமிறங்கிப் போவதில்லை. நீயேனும் இறங்கி வந்து நம் காதலை மீட்டுயிர்ப்பி என் கண்மணி. சகி, இந்தக் கவிதை நினைவு இருக்கிறதா? முன்பொரு காலத்தில் நமக்கு நானெழுதிய கவிதை.
அடிக்கடி நீ சொல்கிறாய் நானாக எதையும் முன்னெடுப்பதில்லை, சண்டையை முடிக்க முயற்சிப்பதில்லை, சண்டைக்கு பின் நானாக முன் வந்து எந்த உரையாடலையும் தொடங்கு வதில்லை என்று. சகி
மேலுள்ள கவிதையில் என்னை என் குறைகளோடு உன்னிடத்து சரண்புகுத்துவது தெரியவில்லையா? பெரு மழையீனும் மேகம் போல ஆண்மை எப்போதுமிறங்கிப் போவதில்லை. நீயேனும் இறங்கி வந்து நம்
காதலை மீட்டுயிர்ப்பி என் கண்மணி. இந்த வரிகளில் இருக்கிற உனக்கான என் அழைப்பு உனக்குத் தெரியவில்லையா? இறங்கிப் போவதில்லை என்று சொல்லி விட்டு, இறங்கி வந்து உன்னை அழைப்பது
புரியவில்லையா? என்னை உன்னிடத்து அடைக்கலப் படுத்துவது தெரியவில்லையா? சகி நீ வேண்டும் சகி. காற்று தொட்டவுடன் பொழியக் காத்திருக்கும் மேகம் போலத் தான் சகி நானும். நீ
காற்றைப் போல ஒரு சொல் சொல் போதும். என் நெஞ்ச வானம் ரெண்டாகப் பிளந்து நேச மழை பொழியத் தொடங்கி விடும். உன் ஒரு சொல்லின் முன் என் கர்வம் எல்லாம் கால் தூசு பெறாது சகி. நீ
யென் வானம் சகி. நான் சிறு பறவை. தன் சின்னச் சிறகுகளால் வானை அளக்கத் துடிக்கிற பறவைப் போல உன்னை முழுதுமாய் எனதாய் ஆக்கிக் கொள்ள துடிக்கிற பறவை நான். சகி உன்னால்
நேசிக்கப்படுவதில் அத்தனை கர்வம் அத்தனை ஆனந்தம். அதனாலே தான் கொஞ்சம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன் சகி. இதைச் சொல்லத் தயங்கி தான் "ஆண்மை எப்போதுமிறங்கிப்
போவதில்லை" என்று மழுப்பி எழுதி விட்டேன். மேலும் இதை நான் சொல்ல வேண்டியதில்லை. உனக்கே தெரியும் எனக்கு ஆணென்கிற கர்வமும், நான் என்கிற கர்வமும் இல்லவே இல்லை என்பது.
சகி, சகி... நீ காதலிப்பதை நிறுத்தி விட்டால் நான் அந்தரத்தில் பறக்கும் போது அடிபட்டு வீழ்ந்தப் பறவை போல செத்து சரிந்து விடுவேன் சகி. கொஞ்சம் நான் வாழவேனும் காதலி சகி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...