Back

Short story

March 25, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

பறை :- மிகுந்த அழகோடு அரங்கேற்றியது. உணர்ச்சிக்கு உருவம் கொடுத்தால் அது கலையாகிறது. கலை என்பதன் முக்கிய நோக்கம் கருத்தை விடவும் உணர்ச்சியைக் கடத்துவதே ஆகும். அதை
சிறப்புறவே செய்தது பறையாட்டம். நாடகமும். (நாடகத்தை பற்றியும் பேசுவோம்) அந்தக் காற் சதங்கை பறையாட்டத்திற்கு ஒரு மாற்று அழகுக் கூட்டியது என்றே சொல்ல லாம். அதுவும்
குறிப்பாக பரதம் ஆடியப் பெண்களுக்கு இரு காலிலும், மற்றப் பெண்களுக்கு ஒரு (வலது) காலிலும் சதங்கை அணிவித்திருந்தது உங்கள் வேலையின் நுணுக்கத்தையும் கலை மீதான ஆர்வம் மற்றும்
ஒழுங்குணர்ச்சியையும் எடுத்துச் சொல்லியது. இன்னும், பார்வையாளர்க்கு வலது புறமாய் பரதம் ஆடியப் பெண் உணர்ச்சி பொங்க ஆடினாள். அவளுக்கு பாராட்டுக்கள். இவ்வளவு
நுணுக்கத்தோடும் கலையுணர்ச்சியோடும் பறை யடித்த பெண்கள், முகத்தில் இறுக்கம் இல்லாமல், அவ்வப்போது தவழ விட்ட புன்னகையை நிகழ்ச்சி ழுழுக்கவும் தவழ விட்டபடி தப்படித்திருந்தால்
இன்னும் சிறப்பாகச் இருந்திருக்கும் என்பது என் கருத்து. (இதிலும் ஒரு பெண் நிகழ்வு முழுக்க புன்னகையை ஏந்திய படியே தப்படித்தாள். @மோ) எதுவாயினும் ஆடாத கால்களையும் ஆட
வைத்து, சாதியச்சாயம் பூசப்பட்டப் பறையை சமத்துவத்தோடு எல்லோரும் கையில் எடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. வாழ்க! வளர்க!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...