Back
Short story
July 14, 2019
சிறுகதை
SHARE

உன்னுடம்பின்
வியர்வை
எனக்கு தீர்த்தம்.
நீ வெட்டி எறியும்
நகத்துண்டுகள்
என் பர்சில் வந்து
குட்டி போடும்.
குளித்த பின்
உன் ஈரக் கூந்தலிருந்தொழும்
நீர் துளி
என் பூமிக்கு மழை.
மயிரடர்ந்த
உன் கெண்டைக்காலில்
சப்தமிடும் கொலுசினோசை
எனக்கு தேவ கீதம் .
உன் பின்னங்கழுத்தின்
பூனை முடிகள் பார்த்தால்
என் ஹார்மோன்கள் பூ பூக்கும்.
அக்குள் வேர்வை யின்
ஈரம் படர்ந்து
மார் மூடிய உள்ளாடை தெரியும் காட்சி
யாரும் எழுதாத கவிதை.
உன் தொடை முடிந்து
முட்டி தொடங்கும் இடத்தின்
பின்னங்காலின் வரிகளும்
அதன் கீழ் ரோமமடர்ந்த கெண்டை காலும்
என் மீதான காமன் கணைகள்.
ஈரந்தேங்கி நின்று வழியுமுன் மார் குழியும்
தொப்புள் பள்ளமும்
என் இளமையின் நீச்சல் குளம்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...