Short story
June 6, 2019
சிறுகதை
SHARE

நான் நிறைய தடவை
நினைத்ததும் முயன்றதும் உண்டு.
யாரோ ஒருவரை போல வாழ.
ஆனால் இதுவரை
நான் நானாகத் தான் இருக்கிறேன்.
யாருக்கும் பகிரப்படாத
எனக்கே எனக்கான துயர்
எனக்கே எனக்கான வலி
எனக்கே எனக்கான ரணம் என்று
வாழ்க்கை எனக்கே எனக்கென
ஒரு பிஞ்சு பிரபஞ்சத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது.
அதை நான் வாழ்ந்து தான்
வளர்த்தெடுக்க வேண்டும்.
மேலும்
என்னை உங்களில் இருந்து
வேறு படுத்தி வைத்திருக்கிறது வாழ்க்கை.
உங்களை நீங்களே சுயமைதுனம் செய்து கொள்வீர்கள்.
என்னை
வாழ்க்கையும் வலியும்
மாறி மாறி மைதுனம் செய்கின்றன.
நீர்க்குமிழி போல என்னை
உருவாக்குவதும் உடைப்பதுமாய் இருக்கின்றன.
எப்படியாயினும்
என்ன செய்தாலும்
என்னை
என் போலவே
வாழ வைத்து அழகு பார்க்க ஆசைப்படுகிறது வாழ்க்கை.
நானும் அப்படியே வாழ ஆசைப்படுகிறேன்.
நீங்கள் எப்படி?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...