Back
Short story
April 23, 2019
சிறுகதை
SHARE

தாய் தொலைத்த பிள்ளை போல கூட்டின் வழி மறந்த குருவி போல மரணத்தை வேண்டி நிற்கும் கிழப் பருவம் போல உன்னை மனம் தினமும் தேடுகிறது வேண்டுகிறது. நீயற்ற வெறுமையில் தீப்பட்ட
புழுவாய் தினம் தினம் துடி துடிக்கிறது. இப்படி எதையாவது எழுதிப் புலம்புகிறது. வா.. வந்து விடு.. என்று கூவி உள்ளுக்குள்ளேயே ஊமையழுகை செய்கிறது. இருந்தாலும் சகி.. நீ
இல்லாமலே இரு. வந்து விட வேண்டாம். நாமொன்றாய் இருந்து காதலித்த நாள்பட்ட நினைவின் ரணம் வலித்தாலும்.. எனக்கு வேண்டியதாகத் தான் இருக்கிறது. வந்து விடாதே.. கண்டிராமலே கடவுளை
போற்றி பூஜிக்கும் பக்தன் போல நீ இல்லாமலே உன்னை காதலித்து கொண்டிருக்கிறேன். Miss you.. 😔😔😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...